வெள்ளி, 5 அக்டோபர், 2012
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 204வது ஆலயத்திருவிழா
ஞாயிறு, 17 ஜூன், 2012
மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா நிகழ்வுகள் இணைய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா நிகழ்வுகள் இணைய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
வியாழன், 24 மே, 2012
தொண்டையில் மீன் சிக்கியதால் 14 மணி நேரம் அவதிப்பட்ட சிறுவன்
உணவை சாப்பிடும் போது அது திடீரென்று தொண்டையில் சிக்கிக் கொண்டால் நாம் எவ்வளவு அவதிப்படுகிறோம் என்பதை விவரிக்க இயலாது.ஆனால் தொண்டையில் மீன் சிக்கி பல மணிநேரம் சிறுவன் அவதிப்பட்டு துடித்த சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது. அங்குள்ள ஓடை ஒன்றில் பிலிப் முயான் (வயது 12) என்ற சிறுவன் தூண்டில் போட்டு 4 சென்டி மீட்டர் நீளம் கொண்ட மீன் ஒன்றை பிடித்தான். அதை தூண்டிலில் இருந்து எடுக்க முயன்றான். அது சரியாக வரவில்லை. எனவே மீனின் தலை பகுதியை தனது வாயில் கவ்வி பிடித்தபடி எடுத்தான். அப்போது அந்த மீன் எதிர்பாராதவிதமாக அவனுடைய வாய்க்குள் போய் தொண்டையில் அடைத்தபடி நின்று கொண்டது. மீனை விழுங்க முடியாமலும், வெளியே கக்கி எடுக்கவும் இயலாமல் தவித்தான். உடனே அவனை மருத்துவமனையில் அனுமதித்து சத்திரசிகிச்சை செய்து சுமார் 14 மணி நேரத்திற்கு பிறகு மீனை வெளியே எடுத்தனர். |
எஜமானியின் உயிரை காப்பாற்றிய குட்டி செல்லப்பிராணி
ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்
ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிளாரி. இவர் வீட்டில் வளர்த்து வரும் கோழி சமீபத்தில் 2 சென்டி மீட்டர் நீளம் கொண்ட முட்டை போட்டது. இந்த முட்டையின் எடை 2 கிராம் தான் இருக்கிறது. எனவே இதுவே உலகிலேயே மிகச்சிறிய கோழி முட்டை என்று கூறப்படுகிறது. இந்த அதிசய முட்டை குறித்து கிளாரி கூறுகையில், `இந்த முட்டை முழுமையான தோற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் ஒரு ஆம்லேட் தயாரிக்க வேண்டுமானால் இது போல 100 முட்டைகள் தேவைப்படும்' என்று மனநெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். |
ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிளாரி. இவர் வீட்டில் வளர்த்து வரும் கோழி சமீபத்தில் 2 சென்டி மீட்டர் நீளம் கொண்ட முட்டை போட்டது. இந்த முட்டையின் எடை 2 கிராம் தான் இருக்கிறது. எனவே இதுவே உலகிலேயே மிகச்சிறிய கோழி முட்டை என்று கூறப்படுகிறது. இந்த அதிசய முட்டை குறித்து கிளாரி கூறுகையில், `இந்த முட்டை முழுமையான தோற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் ஒரு ஆம்லேட் தயாரிக்க வேண்டுமானால் இது போல 100 முட்டைகள் தேவைப்படும்' என்று மனநெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். |
பதினொரு குழந்தைகளைப் பெற்ற இந்தியத் தாய்
வெள்ளி, 18 மே, 2012
பாற்குட பவனி
சனி, 12 மே, 2012
சிறுவயதுக் கனவு நனவானது!
கோவிலுக்குள் இருந்து வானை நோக்கிய அதிசய ஒளி
அதில் சில செய்திகள் சில காலங்களுக்கு பின்னர் பொய்யான கட்டுக்கதை எனவும் ஆதாரங்களோடு நிருபிக்கப்படுவதும் உண்டு. வேற்றுக்கிரவாசிகள் பற்றிய பல்வேறு செய்திகள் இவற்றுக்கு உதாரணமாக கொள்ளலாம் . சரி விசயத்துக்கு வருவோம்..
இவ்வாறு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமே இது. ஆம் பல வருடங்களாக புகைப்படத்துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒரு இந்தியாவின் கரூர் மாவட்டம் பள்ளப்பாளையம் எனும் கிராமத்தில் இரவு நேரம் கோவில் ஒன்றை படம் பிடித்துள்ளார். அப்படி படம் பிடிக்கும் போது அவருடைய காமரா ஒரு நிமிடம் நின்று விட மீண்டும் ஆன் செய்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தில் இருந்து ஒரு ஒளிக்கீற்று வானை நோக்கி செல்வது புகைப்படத்தில் தெட்டத்தெளிவாக பதிவாகியிருந்தது. இதை பார்த்து உறைந்து போன அவர் ஊர் மக்களிடம் காட்டவே விடயம் காட்டுத்தீ போல பரவி ஊரே உறைந்து போனது..... இவ்வாறு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த ஒளிக்கீற்று என்ன? மர்மங்களின் முடுச்சுக்கள் அவிழ காணொளியை காணுங்கள்.
இறந்த பெண் இறுதிச்சடங்கில் கண் விழித்ததால் பரபரப்பு.!
இறந்துவிட்டதாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்ட பெண் இறுதிச் சடங்கு செய்யும் போது திடீரெனக் கண்விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ரெட்டியூர் டாக்டர்ஸ் கொலனியைச் சேர்ந்தவர் பொன்னுவேல். அரிசி வியாபாரி. இவரது மனைவி கல்பனா (36 வயது) ஆஸ்மா நோயாளி.
ஞாயிற்றுக்கிழமை இவருக்குத் திடீரென மூச்சுத் திணறல் அதிகமானது. உடனே அவரது குடும்பத்தினர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கல்பனா இறந்து விட்டதாக கூறினர். இதனால் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்தனர். பின்னர் இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை 9.45 மணியளவில் திடீரென கல்பனாவின் கண்கள் திறந்துள்ளதாகவும், கைகளில் அசைவு ஏற்பட்டதாகவும் உறவினர்கள் கூறினர். உடனே கல்பனாவை சேலத்திலுள்ள மற்றொரு தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். கல்பனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதனால் மீண்டும் கல்பனாவின் உடலை வீட்டிற்குக் கொண்டுவந்தனர். இறந்தவர் கண்விழித்தார் என்ற தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்காததால் உறவினர்கள் மீண்டும் சோகத்தில் மூழ்கினர்.
வெள்ளி, 11 மே, 2012
4 கால்களுடன் அதிசய கோழி
அந்த அதிசய கோழி, மற்ற கோழிகளை போல இருகால்களில் நடப்பதோடு, சில சமயங்களில் நடப்பதற்கு நான்கு கால்களையும் பயன்படுத்துகிறது. கோழிக்கு நான்கு கால்கள் இருப்பதாக தகவல் வெளியானதால் அந்த கோழியை ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.
நான்கு கால்கள் கொண்ட அதிசய கோழியை பார்ப்பதற்கு மக்கள் வந்து செல்வதால், பண்ணை உரிமையாளர் மாதேஸ்வரன், அந்த கோழியை வெட்டாமல் வளர்த்து வருவதாக தெரிவித்தார்.
நடிகை சினேகா திருமணம் நடந்தது
நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.
நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.
இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.
முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ஜெயராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.
திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர்.
முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை
ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.
மாயன் மண்டையோடு விழுந்து உடைந்தது : உலக அழிவு பீதி ஆரம்பம்!