வெள்ளி, 5 அக்டோபர், 2012

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 204வது ஆலயத்திருவிழா

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 204வது ஆலயத்திருவிழாவனது அருட்தந்தை X.I ரஜிவன் அடிகளாரின் தலைமையில் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.இதில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜீட்ஜோண்சன் மற்றும் திருச்சிலுவை ஆலய பங்குதந்தை மதுராங்கன் குரூஸ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.அதனைத்தொடர்ந்து அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பண்டம் மக்களுக்காக வெளியில் எடுத்துவைக்கப்பட்டது.அதன் பின் திருப்பண்டம் ஆசிர்வதிக்கப்பட்டது கொடிஇறக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் அன்னதானமும் குளிர்பானமும் வழங்கப்பட்டது.
1808 ஆம் ஆண்டில் பஸ்குவால் முதலியார் என்பவரால் இவ்வாலயம் சொறிக்கல் கொண்டு அமைக்கப்பட்டது.
1850களில் அமலமரித்தியாகிகள் சபையினரால் ஆலயத்துடன் இணைந்து பாடசாலை ஒன்றினை நிறுவினர். கல்முனைப் பங்குடன் இணைந்திருந்த இப்பங்கினை 07.10.1896இல் ஆயர் பேரருட் திரு.கஸ்ரன் றொபிஷே தனிப்பங்காக பிரகடனப்படுத்தினார். இதனது முதற்பங்குக் குரு அருட்திரு ஜோசப் மேரி அடிகள் (யே.ச) இன்றுவரை 27 பங்குத்தந்தையர்கள் பணியாற்றியுள்ளனர்கள். புரட்டாதி 14ஆம் திகதி இவ்வாலய விழாவாகும்.


சிந்துஜன் 
கல்முனை











ஞாயிறு, 17 ஜூன், 2012

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா நிகழ்வுகள் இணைய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா நிகழ்வுகள் இணைய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் முச்சிறப்புக்களும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 17.06.2012 ஆரம்பமாகி 26.06.2012 காலை 09.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவுபெற இருக்கின்றது.












பத்து நாட்களும் ஆலயத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் இணையத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

pillayar on livestream.com. Broadcast Live Free

வியாழன், 24 மே, 2012

தொண்டையில் மீன் சிக்கியதால் 14 மணி நேரம் அவதிப்பட்ட சிறுவன்


உணவை சாப்பிடும் போது அது திடீரென்று தொண்டையில் சிக்கிக்
கொண்டால் நாம் எவ்வளவு அவதிப்படுகிறோம் என்பதை விவரிக்க இயலாது.ஆனால் தொண்டையில் மீன் சிக்கி பல மணிநேரம் சிறுவன் அவதிப்பட்டு துடித்த சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது. அங்குள்ள ஓடை ஒன்றில் பிலிப் முயான் (வயது 12) என்ற சிறுவன் தூண்டில் போட்டு 4 சென்டி மீட்டர் நீளம் கொண்ட மீன் ஒன்றை பிடித்தான்.

அதை தூண்டிலில் இருந்து எடுக்க முயன்றான். அது சரியாக வரவில்லை. எனவே மீனின் தலை பகுதியை தனது வாயில் கவ்வி பிடித்தபடி எடுத்தான்.

அப்போது அந்த மீன் எதிர்பாராதவிதமாக அவனுடைய வாய்க்குள் போய் தொண்டையில் அடைத்தபடி நின்று கொண்டது. மீனை விழுங்க முடியாமலும், வெளியே கக்கி எடுக்கவும் இயலாமல் தவித்தான்.

உடனே அவனை மருத்துவமனையில் அனுமதித்து சத்திரசிகிச்சை செய்து சுமார் 14 மணி நேரத்திற்கு பிறகு மீனை வெளியே எடுத்தனர்.

எஜமானியின் உயிரை காப்பாற்றிய குட்டி செல்லப்பிராணி

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாய் பல நேரங்களில் எஜமானரை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும் தகவல்களை கேள்விப் பட்டிருக்கி றோம்.இதுபோன்ற ஒரு சம்பவம் இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது. அங்குள்ள வடக்கு வேல்ஸ் பகுதியில் மாற்றுத்திறனாளியான பெண் விக்டோரியா ஷாவ்(58) வசித்து வருகிறார்.


இவர் யார்க்செரி என்று அழைக்கப்படும் குட்டி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு லூயிஸ் என்றும் பெயரிட்டு இருக்கிறார்.விக்டோரியா நடக்க முடியாத நிலையில் வீல் சேரில் இருப்பதால் அவர் தனக்கு அவசர மருத்துவ உதவியை பெற டெலி மருத்துவ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். அதன்படி அவருடைய வீட்டில் அவசர உதவிக்கான ஒலி எழுப்பும் பொத்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. அதை இயக்க செல்லப்பிராணிக்கும் பயிற்சி கொடுத்து வைத்திருந்தார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விக்டோரியா தரை விரிப்பில் வீல்சேர் சிக்கி கீழே விழுந்து விட்டார். அவர் எழுந்திருக்க முடியாமல் தவித்தார். இதை கண்ட செல்லப்பிராணியான லூயிஸ் அவசர உதவி பொத்தானை அழுத்தியது. உடனே மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரது காயத்துக்கு சிகிச்சை அளித்தனர்.`தகுந்த நேரத்தில் செல்லப்பிராணி செயல்பட்டு என் உயிர் காப்பாற்றி விட்டது' என்று விக்டோரியா பெருமிதத்துடன் அதை பாராட்டுகிறார். மேலும் லூயிசை (செல்லப்பிராணி நாய்) விட்டால் எனக்கு துணை ஏதும் இல்லை. அதை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன் என்றும் அவர் கூறுகிறார்.

ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிளாரி. இவர் வீட்டில் வளர்த்து வரும் கோழி சமீபத்தில் 2 சென்டி மீட்டர் நீளம் கொண்ட முட்டை போட்டது.இந்த முட்டையின் எடை 2 கிராம் தான் இருக்கிறது. எனவே இதுவே உலகிலேயே மிகச்சிறிய கோழி முட்டை என்று கூறப்படுகிறது.இந்த அதிசய முட்டை குறித்து கிளாரி கூறுகையில், `இந்த முட்டை முழுமையான தோற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் ஒரு ஆம்லேட் தயாரிக்க வேண்டுமானால் இது போல 100 முட்டைகள் தேவைப்படும்' என்று மனநெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.





ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்


இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிளாரி. இவர் வீட்டில் வளர்த்து வரும் கோழி சமீபத்தில் 2 சென்டி மீட்டர் நீளம் கொண்ட முட்டை போட்டது.

இந்த முட்டையின் எடை 2 கிராம் தான் இருக்கிறது. எனவே இதுவே உலகிலேயே மிகச்சிறிய கோழி முட்டை என்று கூறப்படுகிறது.

இந்த அதிசய முட்டை குறித்து கிளாரி கூறுகையில், `இந்த முட்டை முழுமையான தோற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் ஒரு ஆம்லேட் தயாரிக்க வேண்டுமானால் இது போல 100 முட்டைகள் தேவைப்படும்' என்று மனநெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்


இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிளாரி. இவர் வீட்டில் வளர்த்து வரும் கோழி சமீபத்தில் 2 சென்டி மீட்டர் நீளம் கொண்ட முட்டை போட்டது.

இந்த முட்டையின் எடை 2 கிராம் தான் இருக்கிறது. எனவே இதுவே உலகிலேயே மிகச்சிறிய கோழி முட்டை என்று கூறப்படுகிறது.

இந்த அதிசய முட்டை குறித்து கிளாரி கூறுகையில், `இந்த முட்டை முழுமையான தோற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் ஒரு ஆம்லேட் தயாரிக்க வேண்டுமானால் இது போல 100 முட்டைகள் தேவைப்படும்' என்று மனநெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பதினொரு குழந்தைகளைப் பெற்ற இந்தியத் தாய்

பதினொரு குழந்தைகளைப் பெற்ற இந்தியத் தாய் தொடர்பான சுவாரஷ்ய தகவல்கள்! இந்த விடயம் ஒரு அதிசய விடயமாகத் தான் மருத்துவ உலகால் நோக்கப்பட்டு வருகின்றது.இந்திய பெண் ஒருவர் ஒரே தரத்தில் 11 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார் என்கிற பரபரப்புச் செய்தி முன்னர் வெளியாகியிருந்தமை தொடர்பாக ஏராளமானோர் அறிந்து இருப்பீர்கள்.உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இவை பிறந்தன என்றும் தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது.பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஒன்றாக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்டவை என்று சொல்லப்படுகின்ற புகைப்படங்கள் இணையத் தளங்களில் பிரசுரம் ஆகி இருக்கின்றன.இது நம்ப முடியாத செய்திதான். ஆனால் நடக்க கூடிய காரியம்தான் என்கிற மருத்துவ உலகம்.இந்த 11 குழந்தைகளும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான் என்று நிரூபிக்கின்ற பட்சத்தில் அதிக குழந்தைகளை ஒரே தரத்தில் பிரசவித்த சாதனையாளர் ஆகி விடுவார் இந்திய பெண்.எதிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இது.

வெள்ளி, 18 மே, 2012

பாற்குட பவனி

லுணுகலை பட்டிப்பொல அருள்மிகு நாட்டுக் கதிரேசன் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி தின சங்காபிஷேகம் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது பிரதம கும்பம் மற்றும் பாற்குட பவனி இடம்பெறுவதை இங்கு காணலாம்.

சனி, 12 மே, 2012

சிறுவயதுக் கனவு நனவானது!



சூரியன் அறிவிப்பாளர் கணேசராசா மயூரன் தினக்குரலின் சகோதர வெளியீடானஉதய சூரியனுக்குஅளித்த பெட்டி.
நேர்காணல்:எஸ்.ரோஷன்

நான் பிறந்தது மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை கிராமத்தில். குடும்பத்தின் முதல் வாரிசு. தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் என அழகான அன்பான குடும்பம்.சிறுவயது முதலே வானொலி மீது தீராத காதல் என்று தான் சொல்ல வேண்டும். வானொலி நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்கும் எனக்கு நானும் ஒரு அறிவிப்பாளனாக வரவேண்டும் என உந்துதல் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. என் ஆர்வத்திற்கு தாய், தந்தையர் இருவரும் கைகொடுத்தனர். சிறந்த குரல்வளம் இருக்கிறது, சிறந்த அறிவிப்பாளராக வருவாய் என்று நம்பிக்கையூட்டினார்கள். அந்தக் கனவு இப்போது நனவாகிவிட்டது.ஆரம்பத்தில் தலைநகரில் இணையத்தள வானொலி ஒன்றில் அறிவிப்பாளராக கடமையாற்றினேன். அதன் பின்னர் சூரியன் குடும்பத்திற்குள் நுழைந்தேன். ஆரம்பத்தில் எனக்கு பயிற்சியளித்து ஆலோசனைகளை வழங்கியவர் சூரியன் எப்.எம்.இன் சிரேஷ்ட ஆலோசகர் நடா அண்ணா. அதே போன்று சூரியனின் தலைமை நிறைவேற்று பொறுப்பதிகாரி நவா அண்ணா ஊடகத்துறையில் உள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்றும் எவ்வாறு தனித்திறமையை வளர்த்து அறிவிப்பாளராக வரவேண்டும் என்பதை உணர்த்தி என்னை உற்சாகமூட்டியவர். அத்தோடு சூரியன் எப்.எம்.இன் நிகழ்ச்சி முகாமையாளர்களான சந்துரு அண்ணா மற்றும் பரணி அண்ணா ஆகியோர் என்னை தட்டிக் கொடுத்து வளர்ப்பவர்கள். இத்துறை என்னை இன்னும் மகிழ்விப்பதற்கு காரணம் நேயர்கள். அவர்கள் தரும் அன்பும் ஆதரவும்தான் எம்மை உற்சாகமாகப் பணியில் ஈடுபட வைக்கிறது.மறக்க முடியாத சம்பவம்!உயர்தரப் பரீட்சை வாழ்வில் முக்கியமான கட்டம். பரீட்சைக்கு முதல் நாள் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு விட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மறுநாள் பரீட்சை மண்டபத்தில் அந்த வலியோடு பரீட்சை எழுதியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.நண்பர்கள் பற்றி...?நண்பர்கள் என் வாழ்கையில் முக்கியமான அத்தியாயம். நான் தரம் 09 இல் பாடசாலையில் படிக் கும் போது பாடசாலை திறப்புவிழாவுக்கு என்னை மேடையில் அறிவிப்பு செய்ய திடீரென அழைத்து விட்டார்கள். முன் ஆயத்தம் எதுவுமின்றி அறிவிப்புச் செய்தேன். அன்று நண்பர்கள் தந்த பாராட்டையும் உற்சாகத்தையும் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.அறிவிப்புத் துறையில் செய்ய நினைப்பது...? நிறைய விடயங்களை தேடி நேயர்களுக்கு புதிய விடயங்களை சொல்லவேண்டும். ஊடகத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும். ஊடகத்துறையில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் செயற்பட வேண்டும்.நேயர்களுக்குச் சொல்வது...?நல்ல நிகழ்ச்சிகளைக் கேளுங்கள். நல்ல நிகழ்ச்சிகளுக்கு நிறைய வரவேற்பு கொடுங்கள்.

கோவிலுக்குள் இருந்து வானை நோக்கிய அதிசய ஒளி

என்னதான் உலகம் தொழில்நுட்ப யுகத்தில் இருந்தாலும் அமானுசியங்கள் அதிசயங்கள் என்பன அவ்வப்போது நடந்துவிடத்தான் செய்கின்றன். இவ்வாறான அமானுசிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் வியப்புக்குள்ளாக்குகின்றன:

அதில் சில செய்திகள் சில காலங்களுக்கு பின்னர் பொய்யான கட்டுக்கதை எனவும் ஆதாரங்களோடு நிருபிக்கப்படுவதும் உண்டு. வேற்றுக்கிரவாசிகள் பற்றிய பல்வேறு செய்திகள் இவற்றுக்கு உதாரணமாக கொள்ளலாம் . சரி விசயத்துக்கு வருவோம்..

இவ்வாறு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமே இது. ஆம் பல வருடங்களாக புகைப்படத்துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒரு இந்தியாவின் கரூர் மாவட்டம் பள்ளப்பாளையம் எனும் கிராமத்தில் இரவு நேரம் கோவில் ஒன்றை படம் பிடித்துள்ளார். அப்படி படம் பிடிக்கும் போது அவருடைய காமரா ஒரு நிமிடம் நின்று விட மீண்டும் ஆன் செய்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தில் இருந்து ஒரு ஒளிக்கீற்று வானை நோக்கி செல்வது புகைப்படத்தில் தெட்டத்தெளிவாக பதிவாகியிருந்தது. இதை பார்த்து உறைந்து போன அவர் ஊர் மக்களிடம் காட்டவே விடயம் காட்டுத்தீ போல பரவி ஊரே உறைந்து போனது..... இவ்வாறு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த ஒளிக்கீற்று என்ன? மர்மங்களின் முடுச்சுக்கள் அவிழ காணொளியை காணுங்கள்.

இறந்த பெண் இறுதிச்சடங்கில் கண் விழித்ததால் பரபரப்பு.!


இறந்துவிட்டதாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்ட பெண் இறுதிச் சடங்கு செய்யும் போது திடீரெனக் கண்விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ரெட்டியூர் டாக்டர்ஸ் கொலனியைச் சேர்ந்தவர் பொன்னுவேல். அரிசி வியாபாரி. இவரது மனைவி கல்பனா (36 வயது) ஆஸ்மா நோயாளி.

ஞாயிற்றுக்கிழமை இவருக்குத் திடீரென மூச்சுத் திணறல் அதிகமானது. உடனே அவரது குடும்பத்தினர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கல்பனா இறந்து விட்டதாக கூறினர். இதனால் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்தனர். பின்னர் இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை 9.45 மணியளவில் திடீரென கல்பனாவின் கண்கள் திறந்துள்ளதாகவும், கைகளில் அசைவு ஏற்பட்டதாகவும் உறவினர்கள் கூறினர். உடனே கல்பனாவை சேலத்திலுள்ள மற்றொரு தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். கல்பனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் மீண்டும் கல்பனாவின் உடலை வீட்டிற்குக் கொண்டுவந்தனர். இறந்தவர் கண்விழித்தார் என்ற தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்காததால் உறவினர்கள் மீண்டும் சோகத்தில் மூழ்கினர்.

வெள்ளி, 11 மே, 2012

4 கால்களுடன் அதிசய கோழி

வாழப்பாடி பகுதியில் ஏராளமானோர் கறிக்கோழி பண்ணை வைத்துள்ளனர். வாழப்பாடியில் மாதா கோவில்தெருவில், மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமானகறிக்கோழிக்கடை உள்ளது. அதில் வெட்டி விற்பனை செய்வதற்காக வளர்க்கப்பட்டு வரும் கோழிக்கு அதிசயிக்கும் வகையில் நான்கு கால்கள் உள்ளது.

அந்த அதிசய கோழி, மற்ற கோழிகளை போல இருகால்களில் நடப்பதோடு, சில சமயங்களில் நடப்பதற்கு நான்கு கால்களையும் பயன்படுத்துகிறது. கோழிக்கு நான்கு கால்கள் இருப்பதாக தகவல் வெளியானதால் அந்த கோழியை ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.

நான்கு கால்கள் கொண்ட அதிசய கோழியை பார்ப்பதற்கு மக்கள் வந்து செல்வதால், பண்ணை உரிமையாளர் மாதேஸ்வரன், அந்த கோழியை வெட்டாமல் வளர்த்து வருவதாக தெரிவித்தார்.

நடிகை சினேகா திருமணம் நடந்தது

நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.

நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.

முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ஜெயராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.

திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர்.

முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை

ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.

மாயன் மண்டையோடு விழுந்து உடைந்தது : உலக அழிவு பீதி ஆரம்பம்!

ஜேர்மனியில் மாயன் காலத்து மண்டை ஓடு கீழே விழுந்ததால், அதன் நாடிப் பகுதி சிதறி விட்டது. இது உலக அழிவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்குமோ என்ற அச்சம் பரவி வருகிறது.
ஜேர்மனியின் சேக்ஸனி மாநிலத்தின் கிளாவ்சாவ் என்ற சிறுநகரத்தில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் Quauthemoc எனப்படும் மண்டை ஓடு வைக்கப்பட்டிருந்தது.

இந்த மண்டை ஓட்டை பத்திரிகையாளர் படம் எடுப்பதற்காக வெளியே எடுத்து வைத்தனர். அப்போது மேசையிலிருந்து உருண்டு விழுந்து அதன் நாடிப்பகுதி நொறுங்கியது. இதன் உரிமையாளாரான தாமஸ் ரிட்டர் இதனை கெட்ட சகுனமாகக் கருதவில்லை.

ரிட்டர் இது போன்ற மண்டை ஓடுகளை வைத்திருக்கும் மற்றவர்களோடு மாயரின் பண்டைய பண்பாட்டுக் களமான மெக்சிகோவில் ஒரு சந்திப்பு நடத்த விரும்புகிறார். இந்த ஆண்டின் கடைசி நாளில் இந்த மண்டையோடு மனிதக் குலத்திற்கு ஏதோ ரகசியம் சொல்ல விரும்புகிறது என்றார் ரிட்டர்.

இதுகுறித்து ரிட்டர் கூறுகையில், ஆக்க சக்திக்கும் அழிவு சக்திக்கும் உரிய இறுதி போராட்டத்தைத் தடுக்கும் ஆற்றலை இந்த மண்டை ஓடு இழந்து விட்டதாகக் கருத இயலாது.

ஏனெனில் வேறு சில மண்டை ஓடுகளும் இவ்வாறு சிதைவுகளுக்கு ஆளானது உண்டு. அதனால் எந்தப் பின்விளைவும் ஏற்பட்டதில்லை என்று தெரிவித்தார்.

இந்த மண்டையோடு தென்னிந்தியாவிலிருந்து திபெத்துக்கு வந்து, அங்கிருந்து நாஜிகளால் 1937-39ஆம் ஆண்டுக்குள் ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.