வாழப்பாடி பகுதியில் ஏராளமானோர் கறிக்கோழி பண்ணை வைத்துள்ளனர். வாழப்பாடியில் மாதா கோவில்தெருவில், மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமானகறிக்கோழிக்கடை உள்ளது. அதில் வெட்டி விற்பனை செய்வதற்காக வளர்க்கப்பட்டு வரும் கோழிக்கு அதிசயிக்கும் வகையில் நான்கு கால்கள் உள்ளது.
அந்த அதிசய கோழி, மற்ற கோழிகளை போல இருகால்களில் நடப்பதோடு, சில சமயங்களில் நடப்பதற்கு நான்கு கால்களையும் பயன்படுத்துகிறது. கோழிக்கு நான்கு கால்கள் இருப்பதாக தகவல் வெளியானதால் அந்த கோழியை ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.
நான்கு கால்கள் கொண்ட அதிசய கோழியை பார்ப்பதற்கு மக்கள் வந்து செல்வதால், பண்ணை உரிமையாளர் மாதேஸ்வரன், அந்த கோழியை வெட்டாமல் வளர்த்து வருவதாக தெரிவித்தார்.
வெள்ளி, 11 மே, 2012
4 கால்களுடன் அதிசய கோழி
11:10 PM
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக