உணவை சாப்பிடும் போது அது திடீரென்று தொண்டையில் சிக்கிக் கொண்டால் நாம் எவ்வளவு அவதிப்படுகிறோம் என்பதை விவரிக்க இயலாது.ஆனால் தொண்டையில் மீன் சிக்கி பல மணிநேரம் சிறுவன் அவதிப்பட்டு துடித்த சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது. அங்குள்ள ஓடை ஒன்றில் பிலிப் முயான் (வயது 12) என்ற சிறுவன் தூண்டில் போட்டு 4 சென்டி மீட்டர் நீளம் கொண்ட மீன் ஒன்றை பிடித்தான். அதை தூண்டிலில் இருந்து எடுக்க முயன்றான். அது சரியாக வரவில்லை. எனவே மீனின் தலை பகுதியை தனது வாயில் கவ்வி பிடித்தபடி எடுத்தான். அப்போது அந்த மீன் எதிர்பாராதவிதமாக அவனுடைய வாய்க்குள் போய் தொண்டையில் அடைத்தபடி நின்று கொண்டது. மீனை விழுங்க முடியாமலும், வெளியே கக்கி எடுக்கவும் இயலாமல் தவித்தான். உடனே அவனை மருத்துவமனையில் அனுமதித்து சத்திரசிகிச்சை செய்து சுமார் 14 மணி நேரத்திற்கு பிறகு மீனை வெளியே எடுத்தனர். |