சனி, 12 மே, 2012

இறந்த பெண் இறுதிச்சடங்கில் கண் விழித்ததால் பரபரப்பு.!


இறந்துவிட்டதாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்ட பெண் இறுதிச் சடங்கு செய்யும் போது திடீரெனக் கண்விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ரெட்டியூர் டாக்டர்ஸ் கொலனியைச் சேர்ந்தவர் பொன்னுவேல். அரிசி வியாபாரி. இவரது மனைவி கல்பனா (36 வயது) ஆஸ்மா நோயாளி.

ஞாயிற்றுக்கிழமை இவருக்குத் திடீரென மூச்சுத் திணறல் அதிகமானது. உடனே அவரது குடும்பத்தினர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கல்பனா இறந்து விட்டதாக கூறினர். இதனால் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்தனர். பின்னர் இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை 9.45 மணியளவில் திடீரென கல்பனாவின் கண்கள் திறந்துள்ளதாகவும், கைகளில் அசைவு ஏற்பட்டதாகவும் உறவினர்கள் கூறினர். உடனே கல்பனாவை சேலத்திலுள்ள மற்றொரு தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். கல்பனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் மீண்டும் கல்பனாவின் உடலை வீட்டிற்குக் கொண்டுவந்தனர். இறந்தவர் கண்விழித்தார் என்ற தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்காததால் உறவினர்கள் மீண்டும் சோகத்தில் மூழ்கினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக