புதன், 9 ஜனவரி, 2013

0 எனக்கு நானே போட்டி: அமலா பால்


சினிமாவில் எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன் என்று அமலா பால் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:
தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘நிமிர்ந்து நில்’, தெலுங்கில் ராம்சரணுடன் ‘நாயக்’, அல்லு அர்ஜுனுடன் ‘இடரம்மாயிலதோ’ படங்களில் நடித்துவருகிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் ஏற்றிருக்கிறேன். ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.

தெலுங்கு ‘நாயக்’ படத்தில் திமிர் பிடித்த பெண்ணாக நடிக்கிறேன். இதில் சிரஞ்சீவி, ராதா சேர்ந்து நடித்த ஹிட் பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதில் நான் ஆடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சினிமாவில் ஹீரோயின்களுக்குள்தான் அதிக போட்டி இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. யாரையும் எனக்கு போட்டியாக நினைக்கவில்லை. எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக